பக்கம் எண் :

4292.

     கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
     பையுள் உனக்கென்னை யோ - நெஞ்சே
     பையுள் உனக்கென்னை யோ.

உரை:

     கையிற் பெற்ற அமுத மயமான சிவபெருமானை, மனத்திற் கொண்டு வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்குவதை விடுத்து வருந்த வேண்டா என்பது கருத்து. பையுள் - வருத்தம்.

     (6)