4296. ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
விக்கல் வராதுகண் டாய்.
உரை: திருவருள் ஞானமாகிய அமுதத்தைப் பொருந்தி நுகர்கின்றோமாதலால், இனி நமக்குத் தடை யாதும் இல்லையாம் என்பது குறிப்பு. விக்கல் - விக்குதல்; தடுத்தல் என்பது பொருள். (10)
|