பக்கம் எண் :

4348.

     எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
     புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்

உரை:

     புண்ணியமான தவத்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்துமென்பது பற்றி, “எண்ணிய எண்ணங்கள் எல்லாம் முடிக்கும் புண்ணியனார்” என்று சிவனைப் புகழ்கின்றார். போது - தாமரைப் பூப்போலும் பாதம்.

     (12)