கண
கண்ணிகள்
4354. அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவ ரேதிரு
அம்பல வாணரே வாரீர்
அன்புடை யாளரே வாரீர். வாரீர்
உரை: அருட் பெருஞ்சோதி ஆண்டவர் - திருவருள் ஞானமாகிய சிவவொளியை ஆன்மாக்கட்கு நல்கி இன்பவாழ்வு தந்து ஆண்டருளுபவர். ஆண்டருளும் பெருமானுக்கும் தமக்குமுள்ள தொடர்பு தோற்றுவித்தற்கு, “என் ஆண்டவர்” என இயம்புகின்றார். அம்பலவாணர் - அம்பலத்தில் வாழ்பவர். வாழ்நர் என்பது வாணர் என மருவிற்று. (2)
|