பக்கம் எண் :

4481.

     கலந்துகொள வேண்டுகிறேன் அணையவா ரீர்
          காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
     புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
          புணர்வதற்குத் தருணமிே­த அணையவா ரீர்
     அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
          அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
     இலந்தைநறுங் கனியனையீர் அணையவா ரீர்
          என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

          அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
          அணிவளர்சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.

உரை:

     புலத்தல் - பிணங்குதல். புணர்வது - கூடுதல். அலந்த விடம் - துன்ப மிக்கு வருந்துமிடம். தரியேன் - உயிர் தரிக்க மாட்டேன். இலந்தை நறுங் கனி - இலந்தையின் இனிய பழம்.

     (11)