கண
கண்ணிகள்
4489. பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
அருள்நாட கம்புரியும் கருணா நிதியர்உன்னை
ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம்
சொல்கின்றதே.என்ன
உரை: மன்னர் - முறை புரியும் வேந்தர். உயிர்கள் செய்யும் வினை வகைகட்குரிய பயன்களை அவற்றைச் செய்த உயிரே நுகருமாறு முறை செய்தலின் சிவனை, “மன்னர்” எனவும், தனக்குக் கணவர் என்ற கருத்தால் “நாதர்” எனவும் இயம்புகின்றாள். திருச்சின்னம் - தலைவர்களின் வருகை தெரிவிக்கும் இசைக் கருவி. நாதம் - சின்னத்தின் ஒலி. (2)
|