பக்கம் எண் :

4492.

     ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
          ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
     ஆதியந்தம் காண்பரிய ஜோதிகயஞ் ஜோதிஉன்னோ
          டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம்
                                   சொல்கின்றதே.என்ன

உரை:

     ஓதுதல் - வேதங்களைக் கற்று ஓதுதல். வேதியன் - பிரமன். ஓங்கார பஞ்சகம் - ஓங்காரப் பொருளாகும் திருவைந் தெழுத்து. சுயஞ்சோதி - தானே தனக்கு முதலாக வுள்ள அருளொளி.

     (6)