பக்கம் எண் :

4506.

     கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
          கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
     புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
          பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.

     இதுநல்ல தருணம் - அருள்செய்ய
          இதுநல்ல தருணம்.

உரை:

     இரக்கப் பண்பில்லாத என் மனமும் இளகியுருகும் இனிய பண்பைப் பெற்றுள்ளது என்பாள். “கரையா எனது மனக் கல்லும் கரைந்தது” என்று கூறுகின்றாள். புரையா நிலை - குற்றமுறாத நன்னிலை.

     (6)