பக்கம் எண் :

4611.

     உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
          உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
     செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநடம் ஜோதி. ஜோதி

உரை:

     உய்பிள்ளை பற்பலர் - உலகியல் துன்பத்தினின்றும் உய்தி பெற முயல்வோர் மிக்க பலராய். ஆவல் - ஆர்வத்துடன். ஏவல் செய்பிள்ளை யாக்கிற்று - தன் பணியைச் செய்பவனாக என்னை ஆட் கொண்டது.

     (27)