4946. சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவார டி - அம்மா
சாமி அறிவார டி.
ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி - அம்மா
அற்புதக் காட்சிய டி.
உரை: சன்னிதியில் பெருமானைத் தரிசித்துத் தான் பெற்ற அருள் ஞானப் பேற்றினைத் தான் அறிந்துரைக்கலாகாமையின், “சாமி அறிவாரடி” என்று உரைக்கின்றாள். (33)
|