பக்கம் எண் :

5158.

          நனம்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
          தினம்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி

உரை:

     அகன்ற மாட வீதிகளில் தடையின்றி நடந்து செல்லும் நன்மை பொருந்திய வேதியர்களுக்குத் தலைவனாகிய சிவன் நடம் புரிகின்ற நீதியை உடையவனும், நாள்தோறும் பல கலைகளை ஓதிச் சிவஞானம் அருளுபவனுமாகிய சிதாகாச சோதியானவன்.

     (3)