5176. கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்
கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்
சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.
உரை: மனஅலைச்சலை உண்டு பண்ணுகின்ற துன்பங்கள் நிதமும் மணிகள் இழைத்த பொற் சபையில் வழிபட நீங்குகின்ற கதியைத் தந்தருள்வாயாக; உடம்பொடு கூடியயோக சந்திரன் என்று புகழ்பவன் திருவடிகட்குச் சிவமே சரணம் குருவே சரணம். (21)
|