பக்கம் எண் :

5217.

          வாசிவா சதாசிவ மஹாசிவா தயாசிவா
          வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா.

உரை:

     சிவபெருமானே வருக; சதாசிவ மூர்த்தியே வருக; மகாசிவ மூர்த்தியே வந்தருளுக; தயாசிவ மூர்த்தியே வருக; வருக வருக என வேண்டியவாறாம். கேட்பது சிவபோகமாதலால் அதனைத் தருதல் வேண்டி, “வாசிவா வாசிவா வாசிவா” என்று வேண்டுகின்றார்.

     (40)