5228. சிவஞான நிலையே சிவயோக நிறைவே
சிவபோக உருவே சிவமான உணர்வே
நவநீத மதியே நவநாத கதியே
நடராஜ பதியே நடராஜ பதியே.
உரை: சிவஞான நிலை - சி்வஞான நிலையாவது சிவயோக நிலையாகுமாதலால், “சிவஞான நிலையே சிவயோக நிறைவே சிவபோக உருவே சிவமான உணர்வே” எனத் தெரிவிக்கின்றார். நவநாத கதியே - புதிய நெறியில் நவந்தரு பேதங்களை ஆக்குபவனே. நவநீதி மதி - புதிதான முறையில் நவந்தரு பேதத்தைச் சொல்லுகின்ற பெருமானே. (3)
|