5229. தவயோக பலமே சிவஞான நிலமே
தலையேறும் அணியே விலையேறு மணியே
நவவார நடமே சுவகார புடமே
நடராஜ பரமே நடராஜ பரமே.
உரை: தவயோக பலமே - தவத்தால் விளைகின்ற யோக பலனே. தலையேறும் அணியே - தலை உச்சியில் சூடும் அணி. நவவார நடமே - ஒன்பது துவாரங்களையுடைய உடம்பில் நடம் புரிபவனே. சுவகார புடமே - தனக்குத் தானே தூய்மை செய்பவனே. (4)
|