524.
மாமயி லேறி வருவாண்டி - அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி தீமை யிலாத புகழாண்டி - அவன் சீர்த்தியைப் பாடி யடியுங்கடி.
உரை:
தீமை யிலாத புகழ் - தன்னை யோதுவதால் ஓதுவோர் எவர்க்கும் ஒரு தீங்கும் இல்லாமற் செய்யும் புகழ். சீர்த்தி - மிகுபுகழ். (2)
(2)