5250. ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
ஆகம மேலவனே ஆரண நாவலனே
நாடிய காரணனே நீடிய பூரணனே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
உரை: ஞான நாடகம் ஆடுபவனே; ஜனகர், ஜனத்குமாரர். ஜனானந்தர் முதலிய பெருமக்களுக்கு உபதேசித் தருளிய குருவே; ஆகமங்களுக்கெல்லாம் மேலான பொருளானவனே; நான்காகிய வேதங்களை உடையவனே; எல்லாப் பொருள்கட்கும் காரணமாக உள்ளவனே; எல்லாவற்றிலும் கலந்திருக்கும் பரம்பொருளானவனே. (10)
|