பக்கம் எண் :

5270.

     தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
          துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
     ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே
          ஏம சபையான்என்று ஊதூது சங்கே.

உரை:

     சோம்பிச் செய்தலை நீக்கி விட்டாய் என்று சங்கே ஊதுவாயாக; என் மனத்திருந்த ஏக்கத்தைக் கெடுத்தான் என்று சங்கே ஊதுவாயாக; பொற் சபையான் என்று ஊதுவாயாக.

     (2)