1754. தாவென் றருளு மொற்றியுளீர்
தமியேன் மோக தாகமற
வாவென் றுரைப்பீ ரென்றேன்பின்
வருமவ் வெழுத்திங் கிலையென்றார்
ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ
தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய்
ஆவென் றுரைத்தா ரென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: இஃது ஈற்றடியில் சிறு வேறுபாடுற்று முழுதும் ஒத்து இங்கித மாலையில் (1842) காணப்படுகிறது. உரையும் விளக்கமும் ஆண்டுக் காண்க. (27)
|