529. ஆனந்த மான அமுதனடி - பர
மானந்த நாட்டுக் கரசனடி
தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
சண்முகன் நம்குரு சாமியடி.
உரை: ஆனந்தம் தருகின்ற அமுதம் போல்பவன். பரமானந்த நாடு - மேலான இன்பம் நிறைந்த முத்தி யுலகம். அந்தம் - முடிவு. Êதுரன் - நாலா வகையும் தெரிந்தவன். நால்வகை - சாம தான பேத தண்டம் என்ற நான்கு. (7)
|