541.

    காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
        கண்ணுதல சேயரே வாரும்.
        ஒண்ணுதல் நேயரே வாரும்.

உரை:

     காகம் - காக்கை. கண்ணுதல் சேயர் - கண் பொருந்திய நெற்றியை யுடைய சிவனுக்கு மகனார். ஒண்ணுதல் நேயர்-ஒள்ளிய நெற்றியையுடைய வள்ளி தெய்வயானை எனும் மகளிர் இருவர்க்கும் காதலர், “மங்கையர் கணவ” என்பது முருகாற்றுப் படை.

     (4)