2897. எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்
அச்சோ நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
உரை: யாதும் நிகராதபடிக் கீழ்ப்பட்ட என் பிழைகளை இப்போது நினைக்குங்கால் பொறி புலன்கள் ஐந்தும் கலங்குகின்றன, காண். எ.று.
சோடு - ஒப்பு. இது பெரும்பாலும் இணை என்ற பொருளில் வழங்கும். குற்றம் செய்து கீழ்மை யுறுபவரில் எனக்கு நிகராவார் ஒருவரும் இல்லையென்னும் அளவு தாழ்வுற்றேன் என்றற்கு “எச்சோடும் இல்லா திழிந்தேன்” என்று இயம்புகின்றார். அச்சோ - இரக்கக் குறிப்பு. (28)
|