2918.

     நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
     மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.

உரை:

     வஞ்சனையால் நீட்டிப் பேசுகின்ற நெடுமொழிகளை மனம் நினைந்து பேசுந்தோறும் உள்ளம் வாளால் அறுப்பது போன்ற துன்பம் அடைகின்றது, காண். எ.று.

     நீட்டுதல் - நீளப் பேசுதல். நெடுமொழி - வஞ்சின முதலியன போன்ற தருக்கிப் பேசும் சொற்கள்.

     (49)