4282.

     நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
          நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
     சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
          துட்டநெறியில் கெடுவாயோ தோழி.

உரை:

     நாதாந்த நிலை - நாதத்தை அநீதமாகவுடைய தத்துவ நிலை. போதாந்த நிலை - ஞானநூல் காட்டும் எல்லையாகிய ஞானப் பெருநிலை. தத்துவஞானத்துக்கும் சாத்திர ஞானத்துக்கும் நடுவாகிய ஞானநிலை, “நடுவாம் பொது” எனப்படுகிறது. தற்போதம் - தன்முனப்பென்னும் அகங்காரம். அது தீது செய்தலால் “சூதாம் தற்போதம்” எனத் தலைவி கூறுகிறாள். துட்ட நெறி - தீய நெறி.

     (7)