66. நெஞ்சொடு நேர்தல்

    அஃதாவது, நெஞ்சினை முன்னிலைப் படுத்தி அறிவுரை பகர்தல்.

கலித்தாழிசை

4287.

     அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே
     தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
     தொடங்குநாள் நல்லதன் றோ.

உரை:

     தோற்றக் கேடுகளில்லாத சிவ பரம்பொருளை “அடங்கு நாள் இல்லாது அமர்ந்தான்” எனவுரைக்கின்றார். அடங்குதல் - நடுங்குதல்.

     (1)