4288.

     வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
     நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
     நல்லநாள் எண்ணிய நாள்.

உரை:

     வரம்பிலாற்றல் உடையவனாதலால் சிவனை, “எல்லாமும் வல்லான்” என இயம்புகின்றார். நல்ல நாள் - நன்மை விளைவிக்கும் நாள்.

     (2)