4319. செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே.
உரை: செறிவு - நிறைவு. எல்லாப் பொருளிலும் உயிர்களிலும் குறைவற நிறைந்திருத்தல். உளம் - மனம். அறிவுருவார் - ஞானமே உருவாக வுடையவர். (23)
|