4332.

     தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
          தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
     ஓங்கி னுள்ளே உறைகின்ற பாதம்
          உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய

உரை:

     உயர்ந்தோங்கும் பரம்பொருளாய் என் சிறிய உள்ளத்தின்கண் எழுந்தருளுவது உணர்த்த, “ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம்” என வுரைக்கின்றார். உண்மை - உண்மை ஞானம் குறித்து நின்றது.

     (12)