4333. எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய
உரை: இறவா நிலை - சாகாப் பதம்; பிறவா நெறி எனினும் பொருந்தும். புண்ணியர் - சிவபுண்ணியத்தாற் சிறப்புற்ற ஞானவான்கள். பொய்யர் - பொய்ந்நினைவும் பொய்ச்சொல்லும் பொய்ச் செய்கையுமுடையவர். (13)
|