4342.
வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின் றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம்
உரை:
வான் அந்தமாம் தில்லைமன்று - ஞானாகாயத்தை எல்லையாகவுடைய தில்லையம்பலம். ஆனந்தத் தாண்டவம் - ஆன்மாக்களுக்குப் பேரின்பம் விளைதல் வேண்டிச் செய்கின்ற திருக்கூத்து. (6)
(6)