4349. மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்
உரை: மன்னம்பரம் - நிலைபெற்ற ஆகாசம். நிலமீறாகிய ஏனைப் பூதங்கள் தோன்றி யொடுங்கும் இடமாதலால், ஆகாயமாகிய பூதத்தை, “மன்னம் பரம்” என்று குறிக்கின்றார். அம்பரம் - ஆகாயம். பொன்னடி - அழகிய திருவடி. வடிவில் வடிவு - வடிவங்கட்கெல்லாம் மூல வடிவு. (13)
|