4372. ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
உரை: அம்பலம் - தில்லைச் சிற்றம்பலம், கூட வல்லீர் - தான் அருவமாயினும் அருளுருக் கொண்டு கூடி ஞானவின்பம் நல்குவது பற்றி, “கூட வல்லீர்” என்று கூறுகின்றார். (20)
|