4392.
ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக் கீதல்செய் வீர்இங்கு வாரீர் ஓதரி யீர்இங்கு வாரீர். வாரீர்
உரை:
ஈதல் - அருள் ஞானத்தை வழங்குதல். வேண்டுவார் வேண்டுவது ஈதலுமாம். காதல் - பேரன்பு. ஓதரியீர் - இன்ன தன்மையன் என எடுத்து மொழிதற் கரியவரே. (40)
(40)