4414. ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
ஓதிய நாதரே வாரீர்
ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்
உரை: ஊதியம் - திருவருள் ஞானமாகிய பயன். உண்மை - உண்மை ஞானம். தான் அனாதியாகவும், தன்னையொழிந்த ஆன்மாக்கள் அனைத்துக்கும் ஆதியாகவும் விளங்குதலால், “ஆதி யனாதியீர்” என வுரைக்கின்றார். (62)
|