4416.

          என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
          இன்னுயிர் ஆயினீர் வாரீர்
          என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்

உரை:

     உயிர்க்குள்ளே ஓர் இன்னுயிராயினீர் - உயிர்க்குள் உயிராகக் கலந்து உணர்வின்பம் தருபவராக இருக்கின்றீர்.

     (64)