4417.

          என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
          என்கண் ணனையிரே வாரீர்
          மின்கண் ணுதலீரே வாரீர். வாரீர்

உரை:

     என்கண் அருள்செய்து - எனக்கு அருள் ஞானம் நல்கி. புன்கண் - துன்பம். கண்ணனையீர் - கண் போன்றவரே.

     (65)