4418.

          எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
          எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்
          சொல்லா நிலையினீர் வாரீர். வாரீர்

உரை:

     நல்லார் - நலமே செய்பவர். வல்லீர் - வல்லவரே. சொல்லா நிலையினீர் - மன வாக்குகட்கு எட்டாத பரநிலையை யுடையவர்.

     (66)