4436. ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
ஐயம் தவிர்த்தீரே வாரீர்
மெய்யம் பலத்தீரே வாரீர். வாரீர்
உரை: சந்தேக வீபரித ஞானங்களால் தடுமாறி வருந்தினமை தோன்ற, “ஐயமுற்றேன்” எனக் கூறுகின்றார். வையம் - உலகம். கரி - சான்று. உண்மை ஞானம் பெற்றமை விளங்க, “ஐயம் தவிர்த்தீர்” என வுரைக்கின்றார். மெய்யம்பலம் - நிலையான சிற்றம்பலம். (84)
|