4447. ஓசையின் உள்ளேஓர் ஆசை உதிக்கமெல்
ஓசைசெய் வித்தீரே வாரீர்
பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்
உரை: பொதுவாக எங்கும் நிலவும் ஓசைக்குள் கேட்பார் விரும்பத் தக்க இனிய மெல்லிய இசை யொலியை அமைத்துள்ளமை பற்றி, “ஆசை யுதிக்க மெல்லோசை செய்வித்தீர்” என்று மொழிகின்றார். ஓசை - பொது. ஒலி - சிறப்பு. ஓசை யொலியெலாம் ஆனாய் நீயே” என்பர் திருநாவுக்கரசர். பாசம் - மலமாயை கன்மங்கள். (95)
|