4449.

          ஓடாது மாயை நாடாது நன்னெறி
          ஊடா திருஎன்றீர் வாரீர்
          வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்

உரை:

     மாயா காரியமாகிய உலகியலைத் தொடர்ந்து செல்லாமலும், அதனை நினையாமலும் சன்மார்க்கமாகிய நன்னெறிக்கு மாறுபடாது ஒழுகுக என்றற்கு, “ஓடாது மாயையை நாடாது நன்னெறி ஊடாது இரு” என உபதேசிக்கின்றார். ஊடுதல் - மாறுபடுதல்.

     (97)