4466.

     பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
          பின்பாட்டுக் காலையிே­த ஆடவா ரீர்
     ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
          உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
     சாதலறுத் தெனையாண்டீர் ஆடவா ரீர்
          தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
     ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
          என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்

உரை:

     பேதம் - மக்கள் தேவர் என்ற வேறுபாடு; விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலர் என்ற வேறுபாடுமாம். ஓத வுலவாதவர் - முற்றவும் சொல்லி முடிக்க வொண்ணாத பெருமை யுடையவர். ஏத மறுத்தவர் - காம வெகுளி மயக்க மென்னும் மூவகைக் குற்றங்களையும் நீக்கினவர்.

     (8)