4477. அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
பின்பாட்டுக் காலையிேத அணையவா ரீர்
பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
உரை: அன்பாட்டு - அன்பர் பொருட்டு அம்பலத்தில் ஆடுதல். துன்பாட்டு - துன்பம் தரும் செயல்கள். துரிய நிறை பெரியவர் - உந்தித்தானமாகிய துரிய நிலையில் ஆன்மாக்கட்குக் காட்சி தரும் பெருமையுடையவர். பின்பாட்டுக் காலை - பின்னின்று பாடிப் பரவும் காலம். பின்னிற்றல் வழிபாட்டு முறை. பிச்சு - பித்து; அஃதாவது பெருங்காதல். (7)
|