4478. அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணைவா ரீர்
புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
பொன்மேனிப் புண்ணியரே அணைவா ரீர்
வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
இரைக்கணவு தருணமிேத அணையவா ரீர்
என்னுடைய நாதரே அணையவா ரீர். அணையவா ரீர்
உரை: உம்மேல் ஆணையாக வேண்டுகின்றேன்; என்னை அணைதல் வேண்டும் என்பாளாய், “ஆணையும் மேல் ஆணை என்னை அணைய வாரீர்” என்று முறையிடுகின்றாள். புரைக்கணம் - குற்ற வகைகள். வரைக்கணம் - மலைகளின் கூட்டம். மன்று, சபை. இரைக்கணவு தருணம் - போக நுகர்ச்சிக்குத் தக்ககாலம். அணவுதல் - நெருங்குதல். (8)
|