4480. சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
ஈரகத்ேதன் அல்லஇங்கே அணையவா ரீர்
என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
ஏரகத்ேத அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
உரை: உம்மைச் சேர்தற்கு ஆசை கொண்டேன் என்பாளாய். “சேர உம் மேல் ஆசை கொண்டேன்” எனத் தலைவி கூறுகின்றாள். எனது ஆசை மிகுதியை நீவிர் நன்கு அறிந்ததென வற்புறுத்தற்குத், “திருவுளமே யறிந்தது” என்று தெரிவிக்கின்றாள். இங்கு எனக்கு ஆர் - இவ்வுலகில் என் காதலன்புக்குரியவர் வேறு யாவர் உளர். அயலறியேன் - வேறு பிறரை நினைந்தறியேன். இரு மனம் உடைய பெண்ணல்ல என்பாள் - “ஈரகத்தேனல்லேன்” என இயம்புகிறாள். ஏர் அகத்தே அமர்ந்தருள்வீர் - ஞானத்தால் எழுச்சியுடைய தூயவர் உள்ளத்தில் எழுந்தருள்பவர். ஏரகம் என்னும் திருப்பதியில் உள்ளவர் முருகப் பெருமான். (10)
|