4514.

     தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென
          நினையாமல் சித்தி யான
     அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம்
          எனக்களித்தான் அந்தோ அந்தோ.

உரை:

     தினைத்தனையும் - சிறிதளவும். அறிவறியாச் சிறியவன் - பேரறிவாகிய திருவருள் ஞான நலத்தை அறியாத சிறுமையுடையவன். சித்தி - யோக சித்தி, ஞான சித்தி, காரிய சித்தி.

     (8)