4515.

     பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற
          பேரின்பப் பொருள்தான் யாதோ
     அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம்
          ஆகின்றேன் அந்தோ அந்தோ.

உரை:

     பொதுவில் - ஞானசபையில். பேரின்பப் பொருள் - சிவ பரம்பொருள். அத்துவிதமாதல் - இரண்டற ஒன்றுதல்.

     (9)