4517. எக்கரையும் காணாேத இருட்கடலில்
கிடந்ேதனை எடுத்தாட் கொண்டு
அக்கரைசேர்த் தருளெனுமோர் சர்க்கரையும்
எனக்களித்தான் அந்தோ அந்தோ.
உரை: எக்கரை - எத்தகைய எல்லையும். இருட் கடல் - மலத்திருள்களால் உண்டாகும் அஞ்ஞானமாகிய கடல். அக்கரை - அருள் ஞான நிலை. சர்க்கரை - இன்ப நிலை. (11)
|