4559. ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றும்
பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. சிவசிவ
உரை: ஐம்புலம் - இப் பொறிகளிடமாகத் தங்குகின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தும் புலமாம். மலர்தல் - விரிந்து நிற்றல். பொய்ம்மயல் - பொய்யுணர்வு தோற்றுவிக்கும் மயக்கமாகிய குற்றம். (8)
|