4590.

     ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
          அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
     தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     மல மாயை கன்மங்களால் விளையும் மறைப்பை “ஆபத்து” என்று கூறுகின்றார்; உலகியல் மாயை என்பதும் உண்டு. அவியாமல் - கெடாமல். தீபம் - சிவஞானமாகிய திருவிளக்கு.

     (6)