4594.

     பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
          பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
     திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
          சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி

உரை:

     பரை - பரனது அருட் சத்தி. தூக்கிய திருவடியே ஆதி பராசத்தி என்பதாம். திருவடிக்கு மேல் மேல் என்று காட்டியருளுவது “திரை தூக்கிக் காட்டுதல்” என்று தெரிவிக்கின்றார்.

     (10)